Wednesday, August 19, 2009

என் எண்ணம்

கொண்டு சென்ற என்
விருப்பங்கள்
மீண்டும் என்னிடமே
விட்டு சென்றாய்...
உனக்கு பிடிக்காது
என்பதால் அல்ல
எனக்கு பிடிக்கும்
என்பதால் ....
போதாமல் பெருகும்
என் தனிமையின்
நிமிடங்கள் கூட்ட
வெறுப்புகளின்
நீண்ட தனி எண்ணம்
எட்டி பார்கிறது ...
கிளையிலே வெட்டி விடும்
உன் மவுனம்
விழுதுகளாக பிறக்கிறது
என் ஏக்கத்தின் மிச்சம்
உனக்கு தெரியாமல் ...


நிஜத்திற்கும் பொய்
முகம் உண்டு
உன்னை பார்க்கும்
பொழுது உணர்கிறேன் ..
என் மீது நேசம் கொண்டு
விட்ட பின்னும் வழக்கம்
போல் என்னை அலட்சியம்
செய்வது ....
உனக்கு வாடிக்கை ஆனது
இருந்தும் உன் ஊடலின்
பொழுது ஏற்படுகிற ஏக்கம்
பொய்யான உன் மனதிற்கு
நிஜம் காட்டும் உண்மை
உன் முகத்தின் பிரதிபலிப்பு தான் ....



போனது மீண்டும்
வருவதில்லை
நினைவுகள் வராமல்
போனதும் இல்லை ...
என்ன செய்வது என்று
யோசிக்கும் நிலையில்
மீண்டும் என்னை கடந்து
செல்லும் பாதையில்
விட்டு சென்றாய் சுவடுகளை
பின்பற்றி வரும் பொழுது
மறைந்தே போனது
உன் சுவடுகளும் நீயும் ....
சளைக்காமல் தேடுதல்
இன்னும் தீவீரமானது
உன்னால் ...


எதுவாயினும்
யாதுமாகி
நின்றாய்
உன் பிம்பமே
எனக்கொரு
மாறுதல் ஆனது ...
மாறா நினைவுகளில்
மகிழும் என் மனம்
இனிப்பாக மாறும்
அதிசியம் நிகழ்கிறது
நொடிக்கு நொடி ....


வீழ்ச்சி விளைவிக்கும்
எண்ணம் குடி புக
அனுமதியேன் ...
தடைகளை சுவடுகளாக
மாற்ற எம்மொழி
உதவ ...
வளரும் நின் சிறப்பை
போல் நாளும் பெருமை
பேச ...
செயல் புரிந்து வெற்றி
பெற்ற நின் பழமைக்கும்
நானும் உதாரணமானேன் ...
வெறும் வெற்று பேச்சல்ல
பேசாமல் உரைக்கும்
என் சிந்தனையின் கூற்று இது ...


கவிதையாய் வடித்தேன்
என் அனுபவங்களை
என் உணர்ச்சிகளின்
வடிகாலாக பெற்ற
என் சிந்தனை
மொழி பெயர்க்கிறது
என் புரியாத
எண்ணங்களுக்கும்...
வற்றாமல் செய்கின்ற
அமுதமாய் தமிழ்
என்னுள் நீடிக்கிறது
இந்த அற்புதம் பெற
எத்தனை நாட்களின்
ஏக்கம் உறைந்த
கண்ணீர் துளிகளில்
இன்று பூக்கிறது
தமிழ் மனம் ....


தோழர்களின் தோழமை
எதிர்பார்த்து அமைவதில்லை
தொன்று தொட்டு வருகிற
நட்பு என்னும் பாசம்
புரிதலில் முழுமை அடைகிறது ...
புரியாமல் போன உறவுகள் கூட
பிரிவு என்னும் நினைவுகளில் வாழும் .


முன் நாளில் முளைத்த
முழு புன்னைகையில்
ஒளிர் விட்ட என் தேச பிதாவே
இன் நாட்களிலும் மாறா
புன்னகை பூக்கும் உன் தரிசனம்
மீண்டும் கிடைக்க என்ன தவம்
செய்தேன் ...
நம் தேசத்தின் தேர்தலின்
கொண்டாட்டங்களில் நானும்
உன் புன்னகை ரசித்தேன் ...
என் புன்னகையின் சாயல் வேறு
நின் புன்னகையின் புனிதம் வேறு
எதுவாயினும் உன்னால் சிரிக்கும்
நம் தேசம் வாழியவே ....
உன் மாறா புன்னகையும் வாழியவே .....


நிஜம் தொலைத்து பொய்யை
நேசிக்கும் நான் ...
பொய்யின் விளிம்பில்
உறங்கி கொண்டு இருக்கிறேன்
ஒரு நாளில் தவறி விழுந்து
விட்டேன் ...
உண்மையின் நிழலில் நிற்க
கூட முடியாமல் ஒதுங்கினேன்
பொய்யை தேடி ....
பொய்யும் போயின்
போகமல் நிற்கிறது
உண்மையின் மிச்ச
நிழலில் என் புன்னகை
கூச செய்கிறது ..


என் நிஜத்தை உந்தன்
பொய் மனதை
துரத்துகிறது...
விலகி செல்கிறது
நின் பார்வையும்
பார்க்கும் விதமும் ..
தொலை தூரத்தில்
சந்தித்து கொள்ளட்டும்
நம் நிழல்கள் ...
உண்மை ஒளியில்
நம் நிழல்கள் கூட
பிரகாசிக்கும்
நம் பிரிவை போல் .



மாறா நிலையில் இருக்க
முயல...
மாறாமல் நிலைத்து விட்டன
என் கண்ணீர் ...
காய்ந்த இடங்களில் உன்
வலியின் தடம்...
முகம் கழுவியும் வழிகிறது
உன் பிரிவு நிலை...
சுற்றும் முற்றும் பார்தேன்
தனிமையின் நிழலின்
தவிப்பில் நான் மட்டும்
இருக்க என் நினைவுகள்
என்னை விட்டு எங்கோ
செல்கிறது ....



பிச்சையிட்டாய் என்
எழ்மை நிலையின்
அறிவு பசிக்கு .
நிறைவான பின்
மறந்தே போனேன்
நன்றி மறவாமல் ....
மீண்டும் உன்னை பார்க்க
செல்லும் பொழுது
என் மனம் போல்
நீயும் தூசி படிந்து
காண்கிறாய்...
உன்னை படிக்க
இன்னும் யாரும்
வர வில்லை என்று ஏக்கம்
கொல்லாதே ..
இனி நம் ஆக்கமே ....




மாறிபோனால்
மாற்றி விடலாம்
என்றே நினைத்தேன் .
மறந்தே அல்லவா
போனால் ...
நாம் நடந்து சென்ற
பாதையின் அளவு
கூட குறைந்து
விட்டதாம்
இன்று ..
மறுபடியும்
அந்த பாதையின்
வழியே நீ பயணிக்கும்
பொழுது நான் விட்டு
சென்ற சுவாசம்
உன்னை வந்து சேரும் ..
அப்பொழுது மாறி
விடாதே உன் நிலையிலே
இரு .
என் என்றால் நானும்
மாறி போனாலும்
போவேன் ..




மாற்றாமல்
என்றேனும்
மாற்றம் வந்தது உண்டோ ?
நானும் மாறினேன்
உனக்காக
எல்லாமுமாக ...
காதலின் தோற்றம்
மாறியது ..
மீறாமல் செய்த
சொல்லால்...
வாழ்க்கையும்
வாழும் காலமும்
மாறி போனது
என் மாற்றங்களினால் .




முறையான
விருப்பங்களுக்கு
தான்
என் விருப்பம்...
நீயோ
விரும்பாத
நிலையிலும்..
என்னை
குற்றம் சுமத்த
முடிகிற உன்னால்
எப்படி என்
அன்பைப் பெறமுடியும் ?




சேகரித்துக்
கொள்கிறாள்
நான்
இது வரை
சொல்லாத வார்தைகளை ...
நான் வெளி காட்டி கொள்ள
முடியாத சுயத்தை ...
அவளுடன் நான் இல்லாத
நொடிகளை ...
அவள் என்னிடம் இருந்து
எதிர் பராதவற்றை எல்லாமுமே
சேகரித்துக்
கொள்கிறாள் ...
என்னுடன் முழுமையாக
வாழ...



என்று ஆட்கொண்டேன்
உன் சுகமான
நினைவுகளை ...
நினைத்து பார்கையில்
பல நிலைகளில்
உன் பாதிப்புகளின்
மிச்சம் எராளமாக
நிறைந்துள்ளது ...
நான் அதை அகற்ற
முற்படும் பொழுது
எல்லாம்.
இன்னும் அதிகமான
விளைவுகளை என்
நினைவலைகளில்
ஏற்பட வைக்கிறாய் .
நான் மிக்க நெருங்கி
உன் நினைவுகளை
நேரெதிர் பார்க்கும்
பொழுது அங்கே
கண்டது என்
ஆசைகளின்
பிரதிபலிப்பு மட்டுமே...
நான் விருப்பம்
கொண்டது எல்லாம்
உன் செயல்களின்
நினைவாக என்னை சேர்கிறது .






வேண்டும் என்று நான் கேட்ட
பொழுது எல்லாம்
வேண்டாம் என்றாய் ...
இன்றோ வேண்டாம் என்று
சொல்லும் பொழுது
வேண்டும் என்கிறாயே
உன் முரணப்பாடுகள்
முறிந்து கொள்கிறது
உன் எண்ணத்தில்.
இருந்தும் நான்
சரி என்னும் பொழுது ...
மீண்டும் சொல்கிறாய்
வேண்டாம் என்று ...





உவமையாக்குவேன் உன்
மவுனங்களை இருந்தும் ..
எதனுடன் என்று சற்று
குழம்பி தான் போனேன்
உவமையே உன்னை கண்டு
அஞ்சினாலும் அஞ்சும் ...
எல்லாமுமாய் நீயா இருக்கும்
பொழுது ஒப்பிட்டு என்ன பயன் ?






உச்சத்தை பார்க்கும்
வறுமை ...
கிளசல்களில் கவன
சிதறலில் ...
நிலை கொள்ள வைக்கும்
வார்த்தை..
விடாமல் துரத்தும் கொடிய
நோய் ...
கவலையும் வருத்தமும்
கண்ணிரில் கரைய ...
விடை பெறாமல் விலகி
செல்கிறது ....
என் மன சாட்சி
தொலைந்து போக
சொல்லி விட்டேன்
நகர வாழ்கையில் ....





கடமை உணர்வுக்காக
சிறுமை கொண்டது
போதும்..
உன் வாழ்க்கை நீ
வழயில் வாழ்ந்திடு
காலம் புதிய
சுவடுகள் பதிக்கும்
உன்னை பார்த்து..
அதன் வழியில்
பல பேர் பயணிக்கலாம்
தூற்றலாம் எதுவாயினும்
உன் சிந்தனை
உனக்கு மட்டுமே உயர்வானது .




இந்த
நிஜத்தோடு
என் உள்ளமும்
சுட்டு பொசுங்கும்..
சாம்பலின் மீது
நின்றும் என் ஆணவம்
ஆர்பரிக்கிறது ...
நான் சாம்பலில்
எனக்கான அரியாசனத்தில்
உடகார்ந்து கொண்டு
ரசிக்கிறேன் என்
பொய்யான உள்ளத்தை ...





நட்பின் ஆழத்தை உணர்த்த
நீ ஒன்றும் குழி பறிக்கவில்லை
மாறாக வானளவு உயர்ந்தாய்
நம் நட்பில் ....
இன்னும் இன்னும் வளர்கிறாய்
சுயம்புவாக ..
என் அகம்பாவமும் ஆணவமும் கூட
நல்லதாக தெரிகிறது உன் நட்பை
நான் கொண்டதில் இருந்து ....






விதித்தது யாராக
இருக்கட்டுமே ...
அவை நம்மிடம்
விடை பெற்று செல்லட்டும்.
முதல் தோன்றிய உயிரின்
நிறைவேறாத எச்சங்கள்
தான் இன்று எண்ணங்களின்
தீமையாக வடிவெடுக்கிறது.
எது எப்படி இருப்பினும்
நல் விதையாக விதைத்தால்
முளைப்பதும் நல் விதியே .




நான் உன்
சுவாசமாக
இருக்க வேண்டும்
என்று சொல்லும்
பொழுது கூட
நான் உணரவில்லை
நம் பிரிவை ....
சுவாசிக்கும் பொழுது
எழும் சில மைக்ரான் நொடி
பிரிவு கூட
என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை
சுவாசமாக அல்ல ....
நீ நீயாகவே கலந்திடு என்னுள் ....




முதலும் முடிவுமாய்
ஆனாய்
சிவமாக அல்ல
சக்தியாக ... ..
காத்திருக்கும் நொடிகளில்
காணமல் போகும்
என்
எதிர்பார்புகள்
மீண்டும் மீண்டும்
பிறக்கிறது. என்ன
மாயம் செய்தாயோ
மயங்கி கிடக்கிறேன்
உன்னை காண வேண்டி .



உன் மறு வருகைக்காக
மாறாமல் நான் ..
ஊடலின் பொழுது
ஏற்படும் நொடி நிசப்தம்
போல்...
ஒரு அமைதி நிலை
உன் வருகைக்காக ...
காத்திருக்கிறது .





என் காதலும் நீயே
என் பிரபஞ்சமும் நீயே ..
காதல் அன்பில்
நனையவே விருப்பம்
நீயோ குடை பிடிக்கிறாய்
கேட்டால் ..
நீ மட்டும் என்னை சீண்டும்
பாக்கியம் பெறுகிறாய்
நானும் பெற வேண்டி..
கொடையாக நான்
செய்யும் காதல் இது .





சுற்றிக்கொண்டிருக்கும்
உன் மறுப்புகள்
மாய்த்து கொள்ள துடிக்கிறது ..
உன் விருபங்களாக
மோட்சம் அடைய..



என்னோடு
தொலைந்து போ ..
தொலைக்காமல் இருப்பேன்
என்றும் ..
தொலை தூரத்தில் இருந்தும்
தொல்லை செய்கிறாய்
நினைவுகளில் ..
மகிழ்ச்சி வலியில் கனவும்
களவு போகிறது
உன்னை மீட்டு எடுக்க .

Monday, March 2, 2009

என் மனதின் தேடல்

எனக்கு மனமே
இல்லை
நான் உன்னை
வெறுத்தால்.



நட்பு மட்டுமே
உறவுகள் கடந்து நிற்கும்
நேசமிகு உணர்வாளர்கள்.


தாயே உன் மகிழ்ச்சியை
பார்த்தே என் வாழ்வை
கழிக்க ஆசை
ஆனால் நீ இப்பொழுது
என் அருகில் இல்லை
உன் பிரிவு என்னை
மிகவும் வாட்டுகிறது
நொடிக்கு நொடி
என்ன செய்வேன் நான் .



அடைவேனா? நான் உந்தன் அன்பை
எப்பொழுதும் நேசிப்பதும்,நேசிக்கபடுவதும்
என்றுமே மகிழ்வு தான் .
அடைந்து விட்டேன் உன் அன்பை
நான் அறியாத உன் முரண்பாடுகள்
எல்லாம் எந்தன் அன்புக்குள் அடைக்கலமாகி விட்டது .



நீ என்றுமே அவளுக்கு
விருப்பம் உள்ளவனாய்
மாறி போனாய்
அவள் உன்னை வெறுத்தாலும்
நீ அவளை நேசித்தாய் முன்னைவிட
உனக்கு எப்பொழுதும் அவள் உசத்தி
உன் எண்ணத்திற்கும் நினைவுக்கும்.
அவளுக்கு உன்னை தவிர வேறு உலகம் தெரியாது
அதனால் தான் என்னவோ
உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை போலும் .


எனக்கு என்னை பற்றிய
சுயநலமே அதிகம்
உன்னையே நினைப்பதால்.



இன்னும் திரும்பவில்லையே
என் தென்றல்
உன்னையே எதிர் பார்த்து
இருக்கும் உந்தன் வசந்தம்.



நிம்மதி மட்டும் இருக்காது
நீ இல்லை என்றால்
எனக்கு எப்பொழுதும் நீ
தான் அமைதி தரும்
நிம்மதி .




நீ வைத்த மலரினால்
இன்று பூக்கள்
அனைத்தும் மோட்சம் பெற்றன .


பெற்றன எல்லாம் பெருமையா
பெறாதது ஏங்குவது நியாயம் ஆகுமா
இப்பொழுது என்ன இருப்பது தானே முக்கியம்
இப்பொழுதோ எப்பொழுதோ எதுவாகினும்
உன் மன உறுதி மட்டும் விட்டு விடாதே.



எதுவும் செய்ய இயலாது
தான் என்னால்
என்ன செய்வது உன் நினைவு
என்னை மீண்டும் உன் அகத்தின் உள்
சிறை பட விரும்புகிறதே.



நீ எனக்கு வியப்பாக இருந்தாலும்
உன்னை காணும் காணமல்
இருக்கும் நான் கூட உனக்கு
வியப்பானவனா ?



துறவு கொள்கிறது
நம் பிரிவு
உன்னை நேசித்த நொடியில் இருந்து .


தொடங்கினேன் நான்
உனக்கான நம் சிந்தனையை
தொடக்கத்தில் இருந்தே நீ
என்னை ஆளுமை செய்கிறாய்
இவை எனக்கு மிகவும்
பிடித்தமானதாக மாறியது
உன்னை மட்டும் அல்ல
உன் எண்ணத்தினையும் தான்
நான் நேசிக்கிறேன் .



எதிர் பார்த்தபோது
ஏமாற்றமே
எதிர் பாராது
வரும்.
இருந்தும்
நீ சொல்லும்
அழகான சமாதான
மொழிக்காக
எவ்வளவு ஏமாற்றமே
வந்தாலும் மாறாமல்
காத்திருப்பேன் உன் முகபாவனை காண .



வளமாகும் என் எண்ணம்
உன்னை நினைக்கும் பொழுது
என் வறட்சியின் செழுமை நீ மட்டுமே
உன்னை நினைத்து பார்க்கும் பொழுது எல்லாம்
முதலில் ஏற்பட்ட அதே எண்ணத்தின் பிரதிபலிப்பு
தான் ஏற்படுகிறது .உன் வளமையான நேசம்
எப்பொழுதும் என்னிடம் இருப்பதால் தான்
நான் உன் உயிராக வாழ்கிறேன் .



வாழ்கிறேன் நான்
உன் புன்னகையான நினைவில்
என்றும் .
வாழ துவங்கினேன் நான் நீ
என்னை பார்த்த பின்பு
வாழ்க்கை நீயென நினைத்தேன்
நாமே வாழ்கையாக போனோம் .


நாமே வாழ்கையாக போனோம் .
நம் காதல் ,நம் நேசம்
என்றுமே இருக்கும் .
நம்மை போல வளர்த்து செல்லும்
நம் எண்ணம். பிரபஞ்சத்தின் வளர்ச்சியை
காட்டிலும் நாம் உயர்ந்தவர்களே என்றும் .


என்றும் உன் நினைவை
சுமந்து இருக்கும்
உன் எண்ணம் நான் .
என் எண்ணத்தின் படி
நீ இருந்தால் என்று எதிர்பார்பது
எவ்வளவு ஆபத்தானது ? அறிவேன் நான்.
நீ இருக்கும் உன் இயல்பில் எப்பொழுதும்
இருந்து விடு அப்பொழுது தான்
நீ நான் நாமாக இருப்போம்.



இருப்போம் இப்படியே என்றும்
நான் என் இயல்பில் இருந்து
விட்டு விலகி உன் எண்ணத்திற்கு
மாறும் பொழுது என் ஆணவம் கூட
உன் நேசத்தில் காணமல் போகிறது
நான் பெருமை அடைகிறேன்
நம்மை பார்த்து .




பார்த்து சென்று விட்ட நிமிடங்கள்
இன்னும் நிறைவாக இருக்கிறது
என்னிடம்.
பார்க்காமல் போன நிமிடங்களும்
காரணம் இல்லாமல் தவிக்கிறது
என் நெஞ்சம் .
மீண்டும் எப்பொழுது சந்திப்போம்
என்று நம் எண்ணம் ஏங்குகிறது
என் வெறுமை உன் பர்ர்வையில்
செளுமையாக்கா வருவாயா
இழந்து போன நிமிடங்கள் சேர்த்து
வாழ்வோம் நாம் .


நாம் எப்பொழுது நம் அன்பில்
ஒன்றாக இணைந்தோம்.
நினைவில்லை எனக்கு
அன்பை புரிந்தது கொள்ள
நீ எனக்கு கிடைத்தது போல
நினைவு புரிந்து கொள்ள
நீ இல்லையே இப்பொழுது
இங்கே.
உன் தவிப்பு உணராமல் இருக்கும்
உன்னில் இருக்கும் என் நெஞ்சத்தை
திட்டி கொண்டு இருக்கிறேன் நான் .




''நான் '' எப்பொழுதுமே
உன் நேசத்தில் இல்லை
''நாம் '' என்று தான்
இருப்போம் என்றும் .



என்றும் உன் இயலாமை
நேசிக்கும் உந்தன்
மகிழ்ச்சி நான் .
வெறுத்து ஒதுக்கினாலும்
நான் போக மாட்டேன்
உன் செயலில் தான் என் முடிவு உள்ளது .



உள்ளது உள்ளபடி என்னால்
இருக்க முடியவில்லை
என் எண்ணங்களின் படியே
நான் இல்லாத பொழுது
எப்படி கூறுவேன் உன்னிடம்
என் அன்பை.
உனக்கு நீயே உன்னை சுற்றி
வேலி போட்டு கொண்டு
அதை நான் தான் தகர்க்க வேண்டும்
என்று எதிர் பார்ப்பது என்ன நியாயம் ?
உன் வேலியை நீ தகர்த்து எரிந்து விட்டு வா
உனக்காக நான் காத்து கொண்டு இருக்கும்
நம் நிமிடங்கள் வீணாக போவதை
இனியும் தடுத்து விடு.



ஒன்றும் செய்யாது உன் மவுனம்
என் எண்ணங்களை
என்று இறுமாப்புடன் இருந்தேன்
நான் .
ஆனால் இப்படி செய்து விட்டாயே
என்னை
என் இயல்பான நிமிடங்கள் கூட
உன் மவுனத்தில் கரைகிறது என் மனம் .

என்னை உருவாக்கும் உன் எண்ணங்கள்

உன் வாழ்க்கை ..
நம் எண்ணங்களில் ..
உன் சிரிப்பு ...
என் சிரிப்பில் இருந்து ..
தொடங்குகிறது ...
உன் வெட்கம் ...
என் பார்வையில் ..
தோன்றுகிறது ....
என் அப்பாவித்தனம் ...
உன் திட்டில் உருவாகிறது ....
உன் கோபம் ...
நம் செயலில் ஏற்படுகிறது ...
நம் மகிழ்ச்சி ...
நமக்கான சிந்தனையில் ..
உருவாகி விட்டது ...
என் அறியாமை
உன்னை புரிந்து கொள்ளாமையால் ...
வந்தது ....



வந்து விட்டது வசந்தம் ...
நீ எங்கே ?
வந்து விட்டது என் நம்பிக்கை ..
நீ எங்கே ?
என்னுள் சேர்ந்து விட்டது உன் மகிழ்ச்சி ..
நீ எங்கே ?
எனக்கு புரிந்து விட்டது உன் அன்பு ..
நீ எங்கே ?
எனக்கு அனைத்தும் விளங்க வைத்து..
நீ அருகில் இல்லாமல் எப்படி
வாழ்வேன் அம்மா ...
இப்பொழுது எல்லாம் உன் பிரிவு ..
என்னை துரத்துகிறது தனிமையில் ...



நீ சொல்லும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும்
நம்பிக்கை ஒளிர்கிறது ..
உனக்குள் இருக்கும் நம்பிக்கை நான் ..
இருந்தும் ஏன் தடுமாற்றம் உன்னிடம் ...
உடனே செயல் படுத்து உன் எண்ணங்களை ..
அவை வெற்றி பெற முயற்சி செய் ...
எத்தனை தடைகள் வந்தாலும் ..
அவை பொருட்படுத்தாதே ...
உன் விடா முயற்சி உன்னிடமே உள்ளது ...


நான் தான் தவிக்கிறேன் ..
என் அறியாமையில் ..
ஒரு நாளாவது உன் குரல் ..
கேட்காமல் இருக்க முடியவில்லை ...
என்ற தவிப்பு நொடிக்கு நொடி ..
அதிகமாகிறது என் வருத்தம் ..
நான் மட்டுமே வருந்துகிறேன் என்று ..
சில நேரங்களில் நினைப்பேன் ...
ஆனால் என்னை விட நீயே ..
துடிகிறாய் அதிகமாக ...
என்னவென்று சொல்வது உன் அன்பை ..
நான் மிகவும் பெருமைபடுகிறேன் ..
உன் அன்பை நினைத்து ....



சோகமெனும் வற்றாத ஆற்றினிலே..
இருக்கும் நான் ..
உன் மகிழ்ச்சியில் இருக்கிறது ..
என் வாழ்க்கை ...
என் சோகம் தீர எப்பொழுதும் ..
உன் நினைவு எனக்கு ஆறுதலாக ...
உள்ளது ...
என் சோகம் உன் சோகமும் சேர்ந்தே
உள்ளது என்றும் மறவாதே ...


என்று உன்னை சந்திதேன் ....
என்று நினைவில்லை எனக்கு ..
என் உறவினரின் திருமணத்தின் மூலம் ..
நீ உறவினராகி போனாய் ...
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் ...
பொழுது எப்படி உன்னை பார்த்தேனோ ..
அப்படி தான் இன்னும் இருக்கிறாய் ..
எனக்கு ..உன் நினைவு மூலம்
நானும் குழந்தையாகி போகிறேன் ..
இப்பொழுது கூட நீ சிரிக்கும் பொழுது ..
நான் என்னையே மறந்து உன் மகிழ்ச்சியில் .
மறைந்து போகிறேன் நான் ..
என்னை கண்டு பிடித்து விடாதே...
நான் இப்படி கூட இருக்க முடியுமா ..
என்று நினைக்கவில்லை ...
உன் மகிழ்ச்சியில் நான் பிறக்கிறேன் ..
அனுதினமும் நொடிக்கு நொடி குழந்தையாக ....




அனுமதி இல்லை என்று உன் .
வார்த்தை மட்டுமே ..
சொல்லும் ..
உன் மனது எனக்கு மட்டுமே..
புரியும் .
ஏன் என்றால் உன் மனம்
முழுவதும் நானே இருக்கிறேன் .
உனக்கே அறியாமல் ...



பல நேரங்களில் என் தனிமையில் ...
நான் என்னை சிந்திக்க நினைக்கும் ..
போதெல்லாம் என்னை நினைக்க ..
நினைக்க வெறுமையாக உணர்கிறேன்..
நான் வாழ வேண்டிய வாழ்க்கை இதுவா?
நான் முரண்படுகிறேன் என் சராசரி..
எண்ணங்களில் ..
எப்படி இருப்பினும் உன் நினைவும் அன்பும்
என் வாழ்வில் பல வாழ்க்கை உண்டாக செய்கிறது ....
வாழ்வின் அர்த்தங்களை புரியவைக்கிறது ...



இல்லையே உன்னை போல ஒரு உறவு .
மற்றவர்கள் புரிந்து கொள்ள
என்னை கோபபட வைக்க நொடியில்
முடிகிற உனக்கு என் கோபத்தை
தனிக்க கூட நொடியில் முடிகிறது உன்னால்
எப்படி என்று அறிய விரும்பவில்லை
விருப்பமும் இல்லை . நீ கோப படும் பொழுது
உன் கண்கள் மேலும் மேலும் ஒளி வீசுகிறதை
பார்க்க பார்க்க என் பார்வைக்கும் புதிய
பார்வை தெரிகிறது உன் கோபத்தில்
உன் கோபத்தில் மேலும் இன்புறுகிறேன் நான்.



எனக்கு மட்டுமே தெரியும்
என் எண்ணங்களின் வலிமை.
இருந்தும் எப்படி நான் பாதிக்கபடுகிறேன்?
உன் ஒரு பார்வையில்
என் சிந்தனை அனைத்தும் உன்
வசமாக்கி கொண்டாய் .


சங்கல்பமாக்கிக் கொள்வோம்
நம் உறுதியை .
அன்பு மூலம் அனைத்தும் சாத்தியப்படும்
சாத்தியமாகது என்று எதுவும் இல்லை
அன்பின் மூலம் .


போதும் என்று நீ சொல்வதால்
என் மனம் திருப்தி கொள்ளாது
உன் புன்னகை மீண்டும் மீண்டும் பார்க்க
ஆவலாய் உள்ளேன் போதும் என்று
சொல்லிவிடதே
உன் மகிழ்ச்சியில் உள்ளது என்
உயர்வுகள் ..



படைப்பாளிகள் இல்லை எனில்
இந்த பிரபஞ்சம் எதுவும் இல்லை
அவர்கள் மூலமே வாழ்க்கை
நிற்காமல் ஓடுகிறது
படைப்பு என்றுமே அதிசியம்
புரிந்தவர் புரியாதவர் என்று
பேதம் இல்லை அதனிடம்
படைப்பாளிகளை மதிப்போம்
படைப்பை அறிவோம் போற்றுவோம் .




இல்லை இல்லை இதுவா? நான் ?
என் சுயத்தை காணமல் தேடுகிறேன்
அவை எங்கே உள்ளது என்று ?
என் எண்ணத்தின் படியே நான் இல்லாத பொழுது
மற்றவர்களுக்கு எப்படி நான் தெரிவேன் ?
எனக்கு நான் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் என் எண்ணத்தின் படி
நான் வாழ்வது .என் வாழ்க்கை நான் வாழ வேண்டும்
இல்லை நான் என் எண்ணங்களில்
இருந்து விடு பட வேண்டும்
எனக்குள்ளே தேடுகிறேன் என்னை
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாய்
தெரிகிறேன் நான்.உண்மையில் "நான் "
யார் என்று தேடல் இருப்பதால் தான்
எனவோ நான் என் சுயத்தோடு இருக்கிறேனோ ?


வாழ்த்தவந்தது நட்பு என்பதால்
வாழ்க்கை அறிய முடிகிறது
என்னால்.
தோழமை உணர்வதால் தான்
தொன்றுதொட்டு வருகிற நம் நட்பை
அறிய முடிகிறது நம் அன்பில் .


அம்மா என்று உங்களை
முழுவதுமாக அறிந்து
கொள்ள முடிந்தது
உன் உயிரில் என்னை
வளர்த்தாய்
என் வளர்ப்பில் நீ
வளர்ந்தாய் புன்னகையில்
அம்மா நீங்கள் எப்பொழுதும்
புனிதமாக இருக்கிறிர்கள்
நான் தான் புரிந்து கொள்ளவில்லை.

பழகிய நினைவுகள் (கனவில் )

உன்
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...



காதலில் விழுவேன் என்று....
எப்படி எண்ணினேன் நான் ...
அதுவும் நீயே முடிவு செய்து விட்டு பின் ...


யாராக இருந்தாலும் அன்பு ..
என்னும் உண்மையை ..
உணராமல் இருக்க மாட்டர்கள் ..
அவை தனக்குள்ளே இருந்தாலும் ..
அதை அறியாமல் அன்பு எங்கே என்று ..
கேட்டு கொண்டு இருந்தேன் ...
உன்னை சந்திக்காமல் இருக்கும் வரை ...
நீ எங்கு இருந்தாலும் உன் எண்ணம் ...
என்னிடம் இருபதால் நான் நானாக இருக்கிறேன் ....




உன் கண்கள்
காதலுக்கு
கருப்புகொடி
காட்டுமென்று...
பல உவமை சொன்னாலும் ...
உன் கண் மை ...
நம் பிரிவுக்கு காட்டும் வண்ணம் ..
கருப்பு கொடி காட்டும் ...



காட்டும் உன் விழியில் ..
நான் கட்டுண்டு இருக்கிறேன் ...
என்னை விடுதலை செய்ய ...
உனக்கும் மனம் வராது...
இப்படி வாழவே நானும் விருப்பம் கொண்டேன் ..


விருப்பம் கொண்டேன் ..
உன்னை ..
உன்னை மட்டும் அல்ல ..
உன் எண்ணங்கள் ,விருப்பங்கள் ,
அனைத்தும் ...
உன் நினைவு என்னை பற்றி ..
இருப்பதால் மட்டும் அல்ல ...
நான் நினைப்பதை நீ உன் செயலால் ..
வெற்றிபெற செய்கிறாய் ..
நாம் வாழ போகும் காலம் ..
முழுவதும் நம்முடிய மகிழ்ச்சி ..
அமைய இருக்கிறது .....





அமைய இருக்கிறது ..
நம் வாழ்க்கை ..
துன்பமான தருணங்கள் ..
எல்லாம் ..
இனிமையான நினைவாக அமைகிறது ..
நம்முடிய விட்டு கொடுத்தல் ...
விடை பெறாமல் போட்டி போடுகிறது ...
வெற்றி பெற ..
நாம் எப்படி வாழ வேண்டும் ..
என்று அமைய இருந்த என்
எண்ணம் உன் வருகையால்
உண்மையானது இன்று .....



கிறுக்கன் என்று மற்றவர்கள் சொல்லும் போதெல்லாம்
எனக்கு கோபம் அதிகமாக வரும் ..
ஆனால் நீ என்னை கிறுக்கன் என்று சொல்லும் போதெல்லாம்
மகிழ்கிறேன் அதிகமாக .
ஒரே வார்த்தை தான் இருந்தும்.... சொல்லபடுவது நீயானால்
வாழ்வது நானாக இருக்கும்
உன் வார்த்தையில் ....



உன் வார்த்தைக்கு சக்தி உண்டு ..
என் காயங்களுக்கு அவை மருந்தாகிறது ...
சில நேரங்களில் அவை காயவும் படுத்தியது ...
அப்பொழுது எல்லாம் உன்னை புரிந்து ..
கொள்ளாமையால் வந்த வினை அது ...
எனக்கான சிந்திபவை எல்லாம் ...
உனதாக்கி கொண்டாய் ....
என் எண்ணத்தில் பிரபஞ்சம் மட்டுமே இருந்த இடத்தில் ..
இப்பொழுது பிரபஞ்சம் முழுவதும் நீயாக இருக்கிறாய் ..
எப்படி இது சாத்தியமானது என் மனதிடம் நாளும் நடக்கும் ..
விவாததில் பதில் கிடைக்கவில்லை ...
இருந்தும் முயற்சிக்கிறேன் பதில் தேடி அல்ல ..
என்னுள் இருக்கும் உன்னை தேடி ....
என் பிரியமானவள் இப்படி பிரிந்து இருப்பது ..
முறையா ? உன் வார்த்தை தேடி அலையும்..
உன் வாழ்க்கை ....

Thursday, February 12, 2009

என் உள்ளத்தின் வெளிபாடு இவைகள்

படிதாண்டசெய்திராவிட்டால் ....

என் அறியாமை ...

என்னை விட்டு ...

போகுமா ?

பகுத்தறிந்து பின் ..

அவை மறந்து ..

விடுகிறான் ...

மனிதன் ...

தன் சராசரி சிந்தனைகளுடன் ..





அவளது கருவிழிகள்...

ஏந்தட்டும் அக்னி பார்வை ..

பொருள்களுக்கு விலை ..

பேசும் மனிதர்கள் ..

அவளின் எண்ணத்திற்கு ..

ஈடு விலை பேசும் பொருளா?

மாற்றத்தை உண்டு செய்ய ..

தேவை மனிதர்களின்...

தேவையான மாற்றம்..

கேட்பவர்களும் ,கொடுபவர்களும் ...

நிறுத்தி விடுங்கள் உங்கள் ...

விலை பேசும் வாதங்களை ...




வலிகளே மிச்சமாய்...

அமைகிறது...

என் செயல்...

நான் உணராதவரை ...

இவைகள் ...

தொடர்ந்து வந்து விடுமா ?



தொடர்ந்து வந்து விடுமா..

என் இன்பம் ...

இப்பொழுது நீ பேசிய ..

நொடி என்றும் ..

எதிர்பார்த்து..

இருக்கிறேன் நான் ..



சொல்லவேண்டும் நீ ..
உன் இயற்கையில் ..
நான் எந்த நிலையில் ..
உள்ளேன் என்று ..
சொல்வாய் யா ?
என் சுய தேடலே ..


உன் மவுனதிடமும் மனதிடனும் ..

என் நீண்ட போராட்டம் ..

எல்லை இல்லாமல் ..

சென்று கொண்டிருக்குது ..

இருந்தும் உன் மவுனத்தை

நான் நேசிக்கிறேன் ...

அளவிடாத அளவிற்கு ...




உன்னுடனே வசிக்கின்ற போது..

எனக்கு வார்த்தை தோன்றவில்லை ..

அந்த அற்புத வாழ்வின் அர்த்தம் ...

உன்னகுள் உணர்கிறேன் ...

நீ என் அருகில் இருக்கிறாய் ..

என்பதே எனக்கு வாழ்வு ....



உன்னை
காண விரும்பியபோது...
நீ வெட்கபடுவதை..
பார்க்க பார்க்க ..
எனக்கு உன் வெட்கத்தில்
தொலைந்துபோக ஆசை ...




விழியில்
விழத்தான்
விருப்பம் கொள்கின்றன ..
அதில் எப்பொழுதுமே உன் ..
ஒளி விழி பார்வையில் ..
என்னை தொலைகிறேன் ..
உன்னிடம் ...
இருந்தும் உன்னால்..
என்னை காணமல் ..
தவிக்கிறாய் ...
உன் விழியில் இருப்பதை ..
மறந்து .....





உன்னை மறப்பதற்காக...
முயன்று தோற்றுவிட்டேன் ..
இந்த தோல்வி என்றும் ...
கேட்கிறேன்....


உன்
நிலை.....
என்றும் ...
என்...
நிலமையின்
பிரதிபலிப்பு ...



எண்ணினால்...
என்ன வேண்டுமானால் ..
தோன்றும் ..
அதை செயல் ..
புரிய என் மனம் ..
இடம் கொடுக்காதே ...




என்னவளின் நினைவுகளை
மட்டும் சுமந்து கொண்டு.....
என் நினைவும் மறந்து ..
நான் நீயாகி போனாய் ...
இதற்க்காகவே நான் ..
பிறந்தது போல ...



நான் ..
பிறந்தது போல ...
நீ பிறந்தாய் ...
மறுபடி ...
எனக்குள் நீயாக ..
உனக்குள் நானாக ..
பிறந்தோம் ..
நம் புரிதல்களுக்கு ..





நம் புரிதல்களுக்கு .
பின் ..
ஒன்றும் இல்லாமல்
போனது
பிரபஞ்சம் ...




நான் காலியான பாத்திரமாக..
இருந்தேன் ...
உன் நினைவு மூலம் என்னை ..
அறிவு பாத்திரமாக மாற்றி விட்டாய் ..




மாற்றி விட்டாய் என்னை ..
முழுவதுமாக ...
என் முரண்பாடுகள் கூட உன்னில் ..
பிறக்கிறது புதிய அன்பாக ..
என்னில் நான் என்ன என்ன ..
விட்டு விட வேண்டும் என்பதை ..
நீ உரிமையுடன் கூறினாய்...
உன் சிந்தனையில் ...
நான் செயல் படுகிறேன் ...
நீயாக ...
என் பிம்பம் மாறி போனதா..
உன்னால் ...
என்னை உன்னில் ..
ஆட்கொண்டு விட்டாய் ..




அடைக்கலம் தருவாயடி...
உந்தன் அன்பை ..
எனக்குள் ....



அகமா?புறமா ? ..
அகத்திலும் நீயே ..
புறத்திலும் நீயே ...
எங்கங்கு காணினும் நீயே சக்தி ....




எங்கங்கு காணினும் நீயே சக்தி ....
என்னில் நான் கண்டு விட்டு பிறகு ..






வார்த்தை எழுதவில்லை என்றாலும் ..
அங்கும் நீயே அன்பின் வடிவமாய்...



அன்பின் வடிவமாய்...
இருக்கிறேன் ....
உனக்கு நான் ...
நான் சிந்திக்க படுவதுலே ..
உயர்ந்த சிந்தனை நீ மட்டுமே ...



நான் சிந்திக்க படுவதுலே ..
உயர்ந்த சிந்தனை நீ மட்டுமே ...
அதனால்தான் என்னவோ ...
எனக்கு கர்வமும் அதிகமாக ...
இருகிறதோ ...



நீ இருக்கின்ற
காரணத்தினால்..
நான் உனக்காக எப்பொழுதும் ..
வருகிறேன் உன் எண்ணத்தில் ...


உன் வார்த்தைகளில் ..
என்னை பற்றி பேசும்
போதெல்லாம் நான் ..
முழுமை அடைகிறேன் ...



பொழுது புலர்ந்ததும் ..
உன் நினைப்பே எனக்கு
வருகிறது என்னை அறியாமல்
அனிச்சை செயலாக...


செயலாக இருந்த போதும் நீயே ..
அவை எண்ணத்தில் இருக்கும் போதும் நீயே ..
எனக்கான சிந்திப்பது எல்லாம் உனதாக்கி கொண்டாய் ..
எனக்குள் என்னை காண்பது மறந்து ..
உன்னுள் கண்கிறேன் நான் ...


கள்ளி செடியில் அமர்ந்து ..
இனிமையாக யோசித்தாலும் ..
முள் காயம் பட தான் செய்யும் ...



உன்
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...

உன் எண்ணத்தின் செயல்

என் முழு உண்மையை ..

உன்னிடம் சொல்லிவிட்டு ..

திரும்பி பார்கிறேன் ..

என் வாழ்கையை ..

உன் ஒரு அகசிரிப்பில் ..

நான் முழுமை ஆனேன் ...




முழுமையான பெண்ணாக..

மாறி தான் போனாய் ..

என் கண்ணிரையும் அவநம்பிக்கையும்..

நீ என்னை விட்டு துரத்திய பொழுது ..

என்னுடன் பிறந்து வளர்ந்த நீ

என்னை அறியாமல் ..

முழுமையான பெண்ணாக..

நீ ..

உந்தன் அரவணைப்பில் நான் ...




போர்வைக்குள் இருக்கும்

உண்மை நான் .

உள்ளே இருக்கும் போதும்..

வெளிவந்த பிறகும் மாறாமல்

இருக்கும் நான் .ஒரே நிலை தான் ..

எனக்கு....

இருந்தும் நான் வேறுபடுகிறேன் ..

ஒவ்வொருவருக்கும் ..

ஒவ்வொருவிதமாய்....




இந்த பூமியும்

ஓர் புதிரே!

பதில்கள் தேடி

அலையும் நாம்

விடைகளை தொலைத்து ..

புதிர்களை நோக்கியே

செல்கிறோம் நாம்..


உன் தாய்மையை...

உணர்வை நானும் ..

உணர்ந்து இருக்கிறேன் அம்மா ..

உன் கர்ப்பத்தில் இருக்கும் அந்த ..

நிமிடங்கள் இன்னும் நான்

நினைத்து பார்கிறேன் ...

இன்னும் அந்த அழகான அமைதியை ...

உணர்கிறேன் அம்மா ..

என்னால் விவரிக்க இயலவில்லை ..

கண்ணிர் துளி தான் வருகிறது அம்மா ....



இல்லாத பொழுதாகவே இருக்கும் ..

உன் மவுனம் கூட எனக்கு இல்லாத

பொழுது ...

வெறுமையாக உணர்கிறேன் நான் ..

இப்பொழுது...

உன் மவுனத்தின் மொழியை

எப்பொழுது ரசிப்பேன் நான் ....


கவிதைகள்
மூலம் என்
எண்ணத்தின் வடிகால்கள் ..
கிடைக்கும் என்று
வந்தேன் .
இன்று ..
ஒவ்வோவோருமுறை..
நான் சிந்திக்க படுவதை ..
என்னை பற்றிய ..
பிம்பம் நாளுக்கு நாள் ..
வளருகிறது ...
நான் தேடும் தேடல் ..
எனக்குள் இன்னும் .
வளருகிறது ..
என் எண்ணத்தின் ..
பிரபஞ்சமும் ...
விரிவடைகிறது ...
எல்லை இல்லாமல் ...



புதிய பிரபஞ்சமோ....

நீ..

உன் பிரபஞ்சத்தின்

இயக்கம் என்னுள்..

இயங்கி கொண்டு

இருக்கிறது உனக்கு

அறியாமல் ...





அறியாமையால்

செய்த பிழை ..

என்றாலும்...

உன் பார்வை

என் மீது பட்டு ..

விட்டு போன பொழுது ..

உயிர்த்து எழுந்தேன் ..

உன்னால் ....





என் ஆவல்...

எப்பொழுதும்..

என்னை ..

விட்டு

போகவில்லை ..

அதையே என்னை ..

எப்பொழுதும் உயிர்ப்புடன்...

வைத்திருக்கிறது ..




வைத்திருந்தேன்..

என் மேல்..

நான் கொண்ட ..

நம்பிக்கை ..

என் வாழ்வில் ..

நான் வாழ போகும் ..

தருணங்களில் ..

எதிர்பார்த்து ..

இருக்கும் நான் ..

என் நம்பிக்கை ..

உன் அன்பு மூலம்..

உறுதி படுகிறது ..

நாம் வாழ போகும்.

வாழ்க்கை ...



வாழ்க்கை

என்றும் புதிரானது? ..

வியப்பானது ?...

நாம் அவை ..

எதிர்நோக்கும் ..

பொழுது ஏற்படுகிற ..

புரிதலே நமக்கு ..

வித்தியாசபடுகிறது ..

நம் வாழ்க்கை ..

அப்படி இருந்தும் ..

என் ரசனையில் ரசிக்கிறேன் ..

நான் என் ...

வாழ்கையை ...



வாழ்க்கை வருமாவென ..

நீ ..

காலத்தை எதிர் பார்க்கிறாய் ...

உன் உள்ளத்தில் ...

வாழ்ந்து வருவது ...

உனக்கு புரியவில்லை ...

இல்லை ..

என் அன்பு உனக்கு

புரிய வைக்கவில்லையா ?

நீ என்னை நினைக்கும் ..

போதுஎல்லாம் நான் ..

வாழ்கிறேன் உன் உள்ளதில்...

என்றும் மாறாத உன்..

அன்பை போல் ......





(தந்தை )
அன்பு

என்

மனதில்

பதித்து

விட்டு

செல்லும்

போதெல்லாம் ..

என்

முரண்பாடுகள் ..

உங்களிடம்

தோற்றுபோகிறது...

பெருமையாக ..




பெருமையாக தான் ..

இருந்தேன்..

என்னை சுற்றி ..

என் தோழமை உள்ளது ..

என்று ...

இன்று அனைவரின் ..

மவுனம் ..

என்னை ..

வெறுமையாக ..

நினைக்க வைக்கிறது ..

என் நினைவு ...




என் நினைவு ..

தனிமை

உணர்வை தேடி ..

அலைகிறது .

உன் மனதிடம் ...

எல்லோருக்கும் ..

கிடைக்குமா ?

இந்த வாய்ப்பு!!!..

உன் மனம் தான் ..

என் தனிமையின்

இருப்பிடம் ...

அங்கு நீ கூட இல்லை ..

நான் மட்டுமே தனிமையாக ..

உன் மனதில் ..

தனிமையான என் மனம் ...

உன் வார்த்தைகளில் என் உலகம்

பரிமளிக்க வேண்டினேன் எல்லாவற்றிலும் நீயாக

உன்னால் உருவான உன் உயிர் நான் என்பதால் ..

என்றும் உன் உறவு வேண்டும் மனிதனாக பிறக்க..


பிறக்க நினைத்தேன் அம்மா!

மீண்டும் உன் கருவறையில்..

நான் உள்ளே இருக்கும் பொழுது ..

நீ அடைந்த தாய்மை பூரிப்பை

பார்க்க மீண்டும் பிறக்க வேண்டும் அம்மா..


என் எண்ணத்தில் தோன்றுவதை

எப்படி சொல்வேன் அம்மா

உனக்கு நான் செய்த அவமதிப்பின்

வலி நான் உணரும் பொழுது

என்னை நான் சிந்திக்கவே வெறுக்கிறேன் ..


நீ என்னை வெறுத்ததால் நான் எப்பொழுதும்

கோபம் கொள்கிறேன்.. என்னிடம்

இருக்கும் வெறுப்புணர்வை ....

மற்றவர்கள் மேல் காட்டும் பொழுது .....


மதிப்பை உணர்கிறேன் நான்

உனக்கும் எனக்கும் இருக்கும்

உள்ள பிரிவு உணர்த்துகிறது

உந்தன் மதிப்பு மிக்க அன்பு ...


சிறப்பு வாய்ந்தது

உந்தன் வியப்பு ...




என்றுமே புரியாமல்

இயற்கையில் இருக்கும் நான் ..

அமைதிக்கடல்தான் என் மனம்

உன் நினைவும் அன்பும் ..

எப்பொழுதும் எனக்கு இருப்பதால் ...



நீ

என்னுடன் இருக்கும்

வரையில்....

எந்த துன்பம் வந்தாலும்

இன்பமாக மாற்றும் சக்தி

படைத்தவள் நீ மட்டுமே தோழி ...



நிஜம் மட்டுமே...

நீ ..உனக்குள் நான்

இருக்கும் உந்தன் நிஜம் .



கவனமாயிரு மனிதர்களே ..

இங்கு உலகில் மனிதன் ..

புரிந்து கொள்வதும் இல்லை ..

புரிந்து கொல்லப்பட்டும் இல்லை ..

என் எண்ணங்களுக்கு எப்படி ..

நான் மதிப்பு கொடுகிறேனோ ..

என் சக மனிதனுக்கும் மதிப்பு ..

கொடுப்பேன்...



வெற்றிக் கனி பறிப்போம்..

நித்தம் உண்மை உரைப்போம் ..

துச்சமாக எண்ணினாலும் ..

சிறு சிறு செயலின் மூலம் ..

வென்றிடுவோம் நம் ஒற்றுமையை ..


விட்டு விலகாத ஒரு பந்தம்.

நம் உறவு ..

தோழமை என்றும் துணை

நிற்கும் புரிதலுக்கு அப்பாலும் ...

முன்பு போல் குழந்தைகள் ஆவோம் ..

தோழி உன் குறும்பும் சிரிப்பும் ..

எப்பொழுதும் வேண்டினேன் உன்னிடம் ...



முற்றுப்பெறும் நமக்குள் ..

புரிதல் ஒன்றானால் ..

இல்லாமை முற்றுபெறும் ..





காட்சிப் பிழையாக இருந்தாலும் ..

அவை கானல் நீர் போன்றவை ..

நம் எண்ணம் முற்று புள்ளியை ..

தகர்த்து எரியும் ...





தகர்த்து எரியும் ...

எந்தன் பொய் முகமூடியை ..

நீ பார்க்கும் உண்மை பார்வையில் ..

என் பொய் முகம் காணமல் ..

தேடி அலைந்தேன் உன்னிடம் ..

திருப்பி தந்து விடு என் உண்மையை ..



என் முழு உண்மையை ..

உன்னிடம் சொல்லிவிட்டு ..

திரும்பி பார்கிறேன் ..

என் வாழ்கையை ..

உன் ஒரு அகசிரிப்பில் ..

நான் முழுமை ஆனேன் ...