Thursday, February 12, 2009

என் உள்ளத்தின் வெளிபாடு இவைகள்

படிதாண்டசெய்திராவிட்டால் ....

என் அறியாமை ...

என்னை விட்டு ...

போகுமா ?

பகுத்தறிந்து பின் ..

அவை மறந்து ..

விடுகிறான் ...

மனிதன் ...

தன் சராசரி சிந்தனைகளுடன் ..





அவளது கருவிழிகள்...

ஏந்தட்டும் அக்னி பார்வை ..

பொருள்களுக்கு விலை ..

பேசும் மனிதர்கள் ..

அவளின் எண்ணத்திற்கு ..

ஈடு விலை பேசும் பொருளா?

மாற்றத்தை உண்டு செய்ய ..

தேவை மனிதர்களின்...

தேவையான மாற்றம்..

கேட்பவர்களும் ,கொடுபவர்களும் ...

நிறுத்தி விடுங்கள் உங்கள் ...

விலை பேசும் வாதங்களை ...




வலிகளே மிச்சமாய்...

அமைகிறது...

என் செயல்...

நான் உணராதவரை ...

இவைகள் ...

தொடர்ந்து வந்து விடுமா ?



தொடர்ந்து வந்து விடுமா..

என் இன்பம் ...

இப்பொழுது நீ பேசிய ..

நொடி என்றும் ..

எதிர்பார்த்து..

இருக்கிறேன் நான் ..



சொல்லவேண்டும் நீ ..
உன் இயற்கையில் ..
நான் எந்த நிலையில் ..
உள்ளேன் என்று ..
சொல்வாய் யா ?
என் சுய தேடலே ..


உன் மவுனதிடமும் மனதிடனும் ..

என் நீண்ட போராட்டம் ..

எல்லை இல்லாமல் ..

சென்று கொண்டிருக்குது ..

இருந்தும் உன் மவுனத்தை

நான் நேசிக்கிறேன் ...

அளவிடாத அளவிற்கு ...




உன்னுடனே வசிக்கின்ற போது..

எனக்கு வார்த்தை தோன்றவில்லை ..

அந்த அற்புத வாழ்வின் அர்த்தம் ...

உன்னகுள் உணர்கிறேன் ...

நீ என் அருகில் இருக்கிறாய் ..

என்பதே எனக்கு வாழ்வு ....



உன்னை
காண விரும்பியபோது...
நீ வெட்கபடுவதை..
பார்க்க பார்க்க ..
எனக்கு உன் வெட்கத்தில்
தொலைந்துபோக ஆசை ...




விழியில்
விழத்தான்
விருப்பம் கொள்கின்றன ..
அதில் எப்பொழுதுமே உன் ..
ஒளி விழி பார்வையில் ..
என்னை தொலைகிறேன் ..
உன்னிடம் ...
இருந்தும் உன்னால்..
என்னை காணமல் ..
தவிக்கிறாய் ...
உன் விழியில் இருப்பதை ..
மறந்து .....





உன்னை மறப்பதற்காக...
முயன்று தோற்றுவிட்டேன் ..
இந்த தோல்வி என்றும் ...
கேட்கிறேன்....


உன்
நிலை.....
என்றும் ...
என்...
நிலமையின்
பிரதிபலிப்பு ...



எண்ணினால்...
என்ன வேண்டுமானால் ..
தோன்றும் ..
அதை செயல் ..
புரிய என் மனம் ..
இடம் கொடுக்காதே ...




என்னவளின் நினைவுகளை
மட்டும் சுமந்து கொண்டு.....
என் நினைவும் மறந்து ..
நான் நீயாகி போனாய் ...
இதற்க்காகவே நான் ..
பிறந்தது போல ...



நான் ..
பிறந்தது போல ...
நீ பிறந்தாய் ...
மறுபடி ...
எனக்குள் நீயாக ..
உனக்குள் நானாக ..
பிறந்தோம் ..
நம் புரிதல்களுக்கு ..





நம் புரிதல்களுக்கு .
பின் ..
ஒன்றும் இல்லாமல்
போனது
பிரபஞ்சம் ...




நான் காலியான பாத்திரமாக..
இருந்தேன் ...
உன் நினைவு மூலம் என்னை ..
அறிவு பாத்திரமாக மாற்றி விட்டாய் ..




மாற்றி விட்டாய் என்னை ..
முழுவதுமாக ...
என் முரண்பாடுகள் கூட உன்னில் ..
பிறக்கிறது புதிய அன்பாக ..
என்னில் நான் என்ன என்ன ..
விட்டு விட வேண்டும் என்பதை ..
நீ உரிமையுடன் கூறினாய்...
உன் சிந்தனையில் ...
நான் செயல் படுகிறேன் ...
நீயாக ...
என் பிம்பம் மாறி போனதா..
உன்னால் ...
என்னை உன்னில் ..
ஆட்கொண்டு விட்டாய் ..




அடைக்கலம் தருவாயடி...
உந்தன் அன்பை ..
எனக்குள் ....



அகமா?புறமா ? ..
அகத்திலும் நீயே ..
புறத்திலும் நீயே ...
எங்கங்கு காணினும் நீயே சக்தி ....




எங்கங்கு காணினும் நீயே சக்தி ....
என்னில் நான் கண்டு விட்டு பிறகு ..






வார்த்தை எழுதவில்லை என்றாலும் ..
அங்கும் நீயே அன்பின் வடிவமாய்...



அன்பின் வடிவமாய்...
இருக்கிறேன் ....
உனக்கு நான் ...
நான் சிந்திக்க படுவதுலே ..
உயர்ந்த சிந்தனை நீ மட்டுமே ...



நான் சிந்திக்க படுவதுலே ..
உயர்ந்த சிந்தனை நீ மட்டுமே ...
அதனால்தான் என்னவோ ...
எனக்கு கர்வமும் அதிகமாக ...
இருகிறதோ ...



நீ இருக்கின்ற
காரணத்தினால்..
நான் உனக்காக எப்பொழுதும் ..
வருகிறேன் உன் எண்ணத்தில் ...


உன் வார்த்தைகளில் ..
என்னை பற்றி பேசும்
போதெல்லாம் நான் ..
முழுமை அடைகிறேன் ...



பொழுது புலர்ந்ததும் ..
உன் நினைப்பே எனக்கு
வருகிறது என்னை அறியாமல்
அனிச்சை செயலாக...


செயலாக இருந்த போதும் நீயே ..
அவை எண்ணத்தில் இருக்கும் போதும் நீயே ..
எனக்கான சிந்திப்பது எல்லாம் உனதாக்கி கொண்டாய் ..
எனக்குள் என்னை காண்பது மறந்து ..
உன்னுள் கண்கிறேன் நான் ...


கள்ளி செடியில் அமர்ந்து ..
இனிமையாக யோசித்தாலும் ..
முள் காயம் பட தான் செய்யும் ...



உன்
மனதோடு வாழ்வேன்....
உன் எண்ணத்திலும் வாழ்வேன் ..
எல்லாமே நல்லதாகவே நினைக்கிறன் ..
அனைத்தும் கனவு கண்கிறேன் ..
உன்னோடு சேர்ந்து நானும் ...

உன் எண்ணத்தின் செயல்

என் முழு உண்மையை ..

உன்னிடம் சொல்லிவிட்டு ..

திரும்பி பார்கிறேன் ..

என் வாழ்கையை ..

உன் ஒரு அகசிரிப்பில் ..

நான் முழுமை ஆனேன் ...




முழுமையான பெண்ணாக..

மாறி தான் போனாய் ..

என் கண்ணிரையும் அவநம்பிக்கையும்..

நீ என்னை விட்டு துரத்திய பொழுது ..

என்னுடன் பிறந்து வளர்ந்த நீ

என்னை அறியாமல் ..

முழுமையான பெண்ணாக..

நீ ..

உந்தன் அரவணைப்பில் நான் ...




போர்வைக்குள் இருக்கும்

உண்மை நான் .

உள்ளே இருக்கும் போதும்..

வெளிவந்த பிறகும் மாறாமல்

இருக்கும் நான் .ஒரே நிலை தான் ..

எனக்கு....

இருந்தும் நான் வேறுபடுகிறேன் ..

ஒவ்வொருவருக்கும் ..

ஒவ்வொருவிதமாய்....




இந்த பூமியும்

ஓர் புதிரே!

பதில்கள் தேடி

அலையும் நாம்

விடைகளை தொலைத்து ..

புதிர்களை நோக்கியே

செல்கிறோம் நாம்..


உன் தாய்மையை...

உணர்வை நானும் ..

உணர்ந்து இருக்கிறேன் அம்மா ..

உன் கர்ப்பத்தில் இருக்கும் அந்த ..

நிமிடங்கள் இன்னும் நான்

நினைத்து பார்கிறேன் ...

இன்னும் அந்த அழகான அமைதியை ...

உணர்கிறேன் அம்மா ..

என்னால் விவரிக்க இயலவில்லை ..

கண்ணிர் துளி தான் வருகிறது அம்மா ....



இல்லாத பொழுதாகவே இருக்கும் ..

உன் மவுனம் கூட எனக்கு இல்லாத

பொழுது ...

வெறுமையாக உணர்கிறேன் நான் ..

இப்பொழுது...

உன் மவுனத்தின் மொழியை

எப்பொழுது ரசிப்பேன் நான் ....


கவிதைகள்
மூலம் என்
எண்ணத்தின் வடிகால்கள் ..
கிடைக்கும் என்று
வந்தேன் .
இன்று ..
ஒவ்வோவோருமுறை..
நான் சிந்திக்க படுவதை ..
என்னை பற்றிய ..
பிம்பம் நாளுக்கு நாள் ..
வளருகிறது ...
நான் தேடும் தேடல் ..
எனக்குள் இன்னும் .
வளருகிறது ..
என் எண்ணத்தின் ..
பிரபஞ்சமும் ...
விரிவடைகிறது ...
எல்லை இல்லாமல் ...



புதிய பிரபஞ்சமோ....

நீ..

உன் பிரபஞ்சத்தின்

இயக்கம் என்னுள்..

இயங்கி கொண்டு

இருக்கிறது உனக்கு

அறியாமல் ...





அறியாமையால்

செய்த பிழை ..

என்றாலும்...

உன் பார்வை

என் மீது பட்டு ..

விட்டு போன பொழுது ..

உயிர்த்து எழுந்தேன் ..

உன்னால் ....





என் ஆவல்...

எப்பொழுதும்..

என்னை ..

விட்டு

போகவில்லை ..

அதையே என்னை ..

எப்பொழுதும் உயிர்ப்புடன்...

வைத்திருக்கிறது ..




வைத்திருந்தேன்..

என் மேல்..

நான் கொண்ட ..

நம்பிக்கை ..

என் வாழ்வில் ..

நான் வாழ போகும் ..

தருணங்களில் ..

எதிர்பார்த்து ..

இருக்கும் நான் ..

என் நம்பிக்கை ..

உன் அன்பு மூலம்..

உறுதி படுகிறது ..

நாம் வாழ போகும்.

வாழ்க்கை ...



வாழ்க்கை

என்றும் புதிரானது? ..

வியப்பானது ?...

நாம் அவை ..

எதிர்நோக்கும் ..

பொழுது ஏற்படுகிற ..

புரிதலே நமக்கு ..

வித்தியாசபடுகிறது ..

நம் வாழ்க்கை ..

அப்படி இருந்தும் ..

என் ரசனையில் ரசிக்கிறேன் ..

நான் என் ...

வாழ்கையை ...



வாழ்க்கை வருமாவென ..

நீ ..

காலத்தை எதிர் பார்க்கிறாய் ...

உன் உள்ளத்தில் ...

வாழ்ந்து வருவது ...

உனக்கு புரியவில்லை ...

இல்லை ..

என் அன்பு உனக்கு

புரிய வைக்கவில்லையா ?

நீ என்னை நினைக்கும் ..

போதுஎல்லாம் நான் ..

வாழ்கிறேன் உன் உள்ளதில்...

என்றும் மாறாத உன்..

அன்பை போல் ......





(தந்தை )
அன்பு

என்

மனதில்

பதித்து

விட்டு

செல்லும்

போதெல்லாம் ..

என்

முரண்பாடுகள் ..

உங்களிடம்

தோற்றுபோகிறது...

பெருமையாக ..




பெருமையாக தான் ..

இருந்தேன்..

என்னை சுற்றி ..

என் தோழமை உள்ளது ..

என்று ...

இன்று அனைவரின் ..

மவுனம் ..

என்னை ..

வெறுமையாக ..

நினைக்க வைக்கிறது ..

என் நினைவு ...




என் நினைவு ..

தனிமை

உணர்வை தேடி ..

அலைகிறது .

உன் மனதிடம் ...

எல்லோருக்கும் ..

கிடைக்குமா ?

இந்த வாய்ப்பு!!!..

உன் மனம் தான் ..

என் தனிமையின்

இருப்பிடம் ...

அங்கு நீ கூட இல்லை ..

நான் மட்டுமே தனிமையாக ..

உன் மனதில் ..

தனிமையான என் மனம் ...

உன் வார்த்தைகளில் என் உலகம்

பரிமளிக்க வேண்டினேன் எல்லாவற்றிலும் நீயாக

உன்னால் உருவான உன் உயிர் நான் என்பதால் ..

என்றும் உன் உறவு வேண்டும் மனிதனாக பிறக்க..


பிறக்க நினைத்தேன் அம்மா!

மீண்டும் உன் கருவறையில்..

நான் உள்ளே இருக்கும் பொழுது ..

நீ அடைந்த தாய்மை பூரிப்பை

பார்க்க மீண்டும் பிறக்க வேண்டும் அம்மா..


என் எண்ணத்தில் தோன்றுவதை

எப்படி சொல்வேன் அம்மா

உனக்கு நான் செய்த அவமதிப்பின்

வலி நான் உணரும் பொழுது

என்னை நான் சிந்திக்கவே வெறுக்கிறேன் ..


நீ என்னை வெறுத்ததால் நான் எப்பொழுதும்

கோபம் கொள்கிறேன்.. என்னிடம்

இருக்கும் வெறுப்புணர்வை ....

மற்றவர்கள் மேல் காட்டும் பொழுது .....


மதிப்பை உணர்கிறேன் நான்

உனக்கும் எனக்கும் இருக்கும்

உள்ள பிரிவு உணர்த்துகிறது

உந்தன் மதிப்பு மிக்க அன்பு ...


சிறப்பு வாய்ந்தது

உந்தன் வியப்பு ...




என்றுமே புரியாமல்

இயற்கையில் இருக்கும் நான் ..

அமைதிக்கடல்தான் என் மனம்

உன் நினைவும் அன்பும் ..

எப்பொழுதும் எனக்கு இருப்பதால் ...



நீ

என்னுடன் இருக்கும்

வரையில்....

எந்த துன்பம் வந்தாலும்

இன்பமாக மாற்றும் சக்தி

படைத்தவள் நீ மட்டுமே தோழி ...



நிஜம் மட்டுமே...

நீ ..உனக்குள் நான்

இருக்கும் உந்தன் நிஜம் .



கவனமாயிரு மனிதர்களே ..

இங்கு உலகில் மனிதன் ..

புரிந்து கொள்வதும் இல்லை ..

புரிந்து கொல்லப்பட்டும் இல்லை ..

என் எண்ணங்களுக்கு எப்படி ..

நான் மதிப்பு கொடுகிறேனோ ..

என் சக மனிதனுக்கும் மதிப்பு ..

கொடுப்பேன்...



வெற்றிக் கனி பறிப்போம்..

நித்தம் உண்மை உரைப்போம் ..

துச்சமாக எண்ணினாலும் ..

சிறு சிறு செயலின் மூலம் ..

வென்றிடுவோம் நம் ஒற்றுமையை ..


விட்டு விலகாத ஒரு பந்தம்.

நம் உறவு ..

தோழமை என்றும் துணை

நிற்கும் புரிதலுக்கு அப்பாலும் ...

முன்பு போல் குழந்தைகள் ஆவோம் ..

தோழி உன் குறும்பும் சிரிப்பும் ..

எப்பொழுதும் வேண்டினேன் உன்னிடம் ...



முற்றுப்பெறும் நமக்குள் ..

புரிதல் ஒன்றானால் ..

இல்லாமை முற்றுபெறும் ..





காட்சிப் பிழையாக இருந்தாலும் ..

அவை கானல் நீர் போன்றவை ..

நம் எண்ணம் முற்று புள்ளியை ..

தகர்த்து எரியும் ...





தகர்த்து எரியும் ...

எந்தன் பொய் முகமூடியை ..

நீ பார்க்கும் உண்மை பார்வையில் ..

என் பொய் முகம் காணமல் ..

தேடி அலைந்தேன் உன்னிடம் ..

திருப்பி தந்து விடு என் உண்மையை ..



என் முழு உண்மையை ..

உன்னிடம் சொல்லிவிட்டு ..

திரும்பி பார்கிறேன் ..

என் வாழ்கையை ..

உன் ஒரு அகசிரிப்பில் ..

நான் முழுமை ஆனேன் ...

உன்னில் என்னை கண்டேன்

யோசிச்சாலும் யோசித்து உடனே ..

ஏற்படுத்த வேண்டும் அமைதியை ..

மக்கள் சுதந்திரமாக வாழ உடனே ..

செய்ய வேண்டும் செயல் ...

எம் மக்கள் உயர்வுடன் உயிருடன் இருக்க ..

வழி செய்யுங்கள் உடனே ..


வாருங்கள் தோழர்களே.... தோழிகளே ..ஒன்று கூடுவோம் ..

எதற்காக ?எங்கும் அமைதியை தேடி நிற்கும் நம் மக்களை நோக்கி ..

உறுதி கொள்ளுங்கள் நண்பர்களே இப்பொழுதும் நம் உதவி

நம் சகோதரர்களுக்கு கிடைக்க வில்லை என்றால் ..

எப்பொழுது ? போர் நிறுத்த குரல் கொடுப்போம் ...

ஒன்று சேருங்கள் தோழர்களே.... தோழிகளே

மனிதனை கொன்று மனிதம் சாகின்ற

வாழ்வை விரட்டுவோம் வாருங்கள் ...




தப்பிக்க முடிஞ்சிடுமா?

இவர்களின் கொடுர செயல் ..

மனிதம் கொன்று தான் உங்கள் வெறி தீரும்

என்று நினைத்தால் இப்பொழுதே நிறுத்துங்கள் போர்..

ஒரு உயிரை கொன்று வாழ நினைப்பது

விலங்கு செய்கின்ற செயல்

தன் சக சகோதர சகோதரி கொன்று தான் வாழ

ஆசை படுவது விலங்கினும் கீழான செயல் ..

மற்ற விலங்குகள் நம்மை பார்த்து ஏளனம் செய்கின்றன ..

இங்கு வாழ்பவர்களை விட புதைக்கப்படவர்களே அதிகம் என்று..


சொல்லப் போனால் நீயும் நானும் வேறல்ல ..

என் எண்ணத்தில் அனைத்திலும் நீயாக இருப்பதால் ..



நீ நீயாக இருப்பதால் தான்..

நான் என்னை உணர முடிகிறது ..

உன் எண்ணத்திலும் நானே முழுமையாக இருப்பதால் ..


எண்ணங்களையும் செயலும் நமக்குள்..

மாறுபடலாம் அன்பு எப்பொழுதும் மாறாதே..


சரணடைந்தேன் உன்னிடம் எப்பொழுதும் ..

உன் நேசத்திற்கு முன்னால் நான் ..

உன் பார்வைக்கு முன்னால் நான் ..

உன் அழகான வெட்கத்திற்கு நான் ..

உன் சிரிப்புக்குள் நான் எப்பொழுதும் சரணடைந்தேன்..


நீ அனுதினமும் என்னையே..

நினைப்பதால் நான் நானாக ..

இருக்கமுடியவில்லை நான் நீயாக

மாறி போனாய்...

மாறி போனாய் நீ என்று சொல்லும் போது..

புரியவில்லை எனக்கு உன்னை பிரிந்த

போது நான் முற்றிலும் மாறி போனேன்

அம்மா!!

என் எண்ணம்

என்றுமே உன்னிடம் அன்பு கொள்வேன்..

முன்பு விட எப்பொழுதும் அன்பு செலுத்துவேன் ...

என்னை நேசிக்கும் அளவை விட உன்னை ..

நேசிப்பதால் நானும் நேசிக்கபடுகிறேன் ..

முன்பு போல் அன்பு மாறாது ஆனால் ..

நாளுக்கு நாள் வளரும் என்பது உண்மை ..


உண்மை சில சமயங்கள் ...

பொய்யை விட அழகானது தான் ..

அது மற்றவர்களுக்கு உண்மையாக இருகிறோமோ..

இல்லையோ நமக்கு நாம் உண்மையாக இருந்தால் ..

பொய் கூட பொய்யாக போகும் உண்மையாக ...


அழையுங்கள் போதும். நீ எப்பொழுது எல்லாம் ..

துவண்டு போனாலும் நான் இருப்பேன் என்றும் ..

உனக்குள் இருக்கும் ''நம்பிக்கை '' நான் .

நான் பிரியும் வரையிலும். புரியவில்லை வலி ..

பிறகு தான் புரிந்தது என் நாட்டை ..

விட்டு வந்ததில் என் உயிர் அங்கே ..

இருக்கிறது இப்பொழுது அகதியாய்..

என் உடல் மட்டுமே உள்ளது ..

என் முற்றுபெறாத எண்ணம்

என் நெஞ்சத்திற்கு மட்டுமே..

தெரியும் உன் அன்பு முழுவதும் ..

எனக்கே கொடுத்து விட்டாய் ...

உன்னை அறியாமல்....



.

நீ ஏமாற்றும் சாதி என்று எண்ணத்திலும்..

நினைக்க மாட்டேன் என்னை நீ அறிவாய்..

உன்னை நான் அறிவேன் சாதிகளை கொன்று

சாதிகளற்ற சமுதாயம் படைப்போம்...






படைப்போம் நாம் நம்மில் யார்..

யார் அதிகமாக அன்பு செலுத்துவதில் என்று

புது காவியம் படைப்போம் ..



புதிய பாரதம் படைப்போம் ..

புதிய சிந்தனை படைப்போம் ..

புதிய செயல் திறன் படைப்போம் ..

மனிதம் என்றும் மறவாமல் இருக்க..

புதிய சரித்திரம் படைப்போம் ...



உன்னை காணாத போது கடவுளை ..

தேடுவது போல தேடுகிறேன் ...

பின்னர் தான் புரிந்தது ...

கடவுளை போல நீயும் என் உள்ளத்தில் என்றுமே ...

நிலை கொண்டு உள்ளாய் என்று ...
நான் எப்பொழுதும்
காதல் செய்கிறேன்
நீ கடவுள் என்பதால்..


மறுக்கிறது என் மனம் என்ன செய்ய..
உன்னை நான் நினைக்கவில்லை என்று சொல்லும்
வார்த்தைக்கு தெரியாது என் மனம் பட்ட வேதனையான இன்பம்.
இனி மறுபதற்கு எதுவும் இல்லை ஆதலால் எப்பொழுதும்
உன்னை நினைப்பேன் உன்னை போல..

சுற்றி வருவேன் நிதமும் உன்னை..
என் மனம் உன்னை சுற்றுவதால்..

சுற்றுவதால் ஏற்படுகின்ற மயக்கம் விட...
உன்னை நினைத்தாலும்
வருகின்ற மயக்கம் மீண்டும் மீண்டும்..
கேட்கிறேன் என் மனதிடம் எப்பொழுதுமே..

சூரியனாக நீ இருந்தாலும் அதில்..
தோன்றும் நிழலாக எப்பொழுதும்..
உன்னை பிரியாமல் இருப்பேன்..

காதலின் ஈர்ப்பு எனக்கு எப்பொழுதும் ....
இருப்பதால் தான் உணரமுடிகிறது.
உன் அன்பு என்னும் மையத்தில்
நான் ஒரு கோளமாக உன்னை எப்பொழுதும் சுற்றுகிறேன் ..

என் மனதின் பிரபஞ்சம் எல்லையற்றது .

என் மனதின் பிரபஞ்சம் எல்லையற்றது .