உன் வாழ்க்கை ..
நம் எண்ணங்களில் ..
உன் சிரிப்பு ...
என் சிரிப்பில் இருந்து ..
தொடங்குகிறது ...
உன் வெட்கம் ...
என் பார்வையில் ..
தோன்றுகிறது ....
என் அப்பாவித்தனம் ...
உன் திட்டில் உருவாகிறது ....
உன் கோபம் ...
நம் செயலில் ஏற்படுகிறது ...
நம் மகிழ்ச்சி ...
நமக்கான சிந்தனையில் ..
உருவாகி விட்டது ...
என் அறியாமை
உன்னை புரிந்து கொள்ளாமையால் ...
வந்தது ....
வந்து விட்டது வசந்தம் ...
நீ எங்கே ?
வந்து விட்டது என் நம்பிக்கை ..
நீ எங்கே ?
என்னுள் சேர்ந்து விட்டது உன் மகிழ்ச்சி ..
நீ எங்கே ?
எனக்கு புரிந்து விட்டது உன் அன்பு ..
நீ எங்கே ?
எனக்கு அனைத்தும் விளங்க வைத்து..
நீ அருகில் இல்லாமல் எப்படி
வாழ்வேன் அம்மா ...
இப்பொழுது எல்லாம் உன் பிரிவு ..
என்னை துரத்துகிறது தனிமையில் ...
நீ சொல்லும் ஒவ்வொரு
வார்த்தைகளிலும்
நம்பிக்கை ஒளிர்கிறது ..
உனக்குள் இருக்கும் நம்பிக்கை நான் ..
இருந்தும் ஏன் தடுமாற்றம் உன்னிடம் ...
உடனே செயல் படுத்து உன் எண்ணங்களை ..
அவை வெற்றி பெற முயற்சி செய் ...
எத்தனை தடைகள் வந்தாலும் ..
அவை பொருட்படுத்தாதே ...
உன் விடா முயற்சி உன்னிடமே உள்ளது ...
நான் தான் தவிக்கிறேன் ..
என் அறியாமையில் ..
ஒரு நாளாவது உன் குரல் ..
கேட்காமல் இருக்க முடியவில்லை ...
என்ற தவிப்பு நொடிக்கு நொடி ..
அதிகமாகிறது என் வருத்தம் ..
நான் மட்டுமே வருந்துகிறேன் என்று ..
சில நேரங்களில் நினைப்பேன் ...
ஆனால் என்னை விட நீயே ..
துடிகிறாய் அதிகமாக ...
என்னவென்று சொல்வது உன் அன்பை ..
நான் மிகவும் பெருமைபடுகிறேன் ..
உன் அன்பை நினைத்து ....
சோகமெனும் வற்றாத ஆற்றினிலே..
இருக்கும் நான் ..
உன் மகிழ்ச்சியில் இருக்கிறது ..
என் வாழ்க்கை ...
என் சோகம் தீர எப்பொழுதும் ..
உன் நினைவு எனக்கு ஆறுதலாக ...
உள்ளது ...
என் சோகம் உன் சோகமும் சேர்ந்தே
உள்ளது என்றும் மறவாதே ...
என்று உன்னை சந்திதேன் ....
என்று நினைவில்லை எனக்கு ..
என் உறவினரின் திருமணத்தின் மூலம் ..
நீ உறவினராகி போனாய் ...
நாம் சிறு பிள்ளையாக இருக்கும் ...
பொழுது எப்படி உன்னை பார்த்தேனோ ..
அப்படி தான் இன்னும் இருக்கிறாய் ..
எனக்கு ..உன் நினைவு மூலம்
நானும் குழந்தையாகி போகிறேன் ..
இப்பொழுது கூட நீ சிரிக்கும் பொழுது ..
நான் என்னையே மறந்து உன் மகிழ்ச்சியில் .
மறைந்து போகிறேன் நான் ..
என்னை கண்டு பிடித்து விடாதே...
நான் இப்படி கூட இருக்க முடியுமா ..
என்று நினைக்கவில்லை ...
உன் மகிழ்ச்சியில் நான் பிறக்கிறேன் ..
அனுதினமும் நொடிக்கு நொடி குழந்தையாக ....
அனுமதி இல்லை என்று உன் .
வார்த்தை மட்டுமே ..
சொல்லும் ..
உன் மனது எனக்கு மட்டுமே..
புரியும் .
ஏன் என்றால் உன் மனம்
முழுவதும் நானே இருக்கிறேன் .
உனக்கே அறியாமல் ...
பல நேரங்களில் என் தனிமையில் ...
நான் என்னை சிந்திக்க நினைக்கும் ..
போதெல்லாம் என்னை நினைக்க ..
நினைக்க வெறுமையாக உணர்கிறேன்..
நான் வாழ வேண்டிய வாழ்க்கை இதுவா?
நான் முரண்படுகிறேன் என் சராசரி..
எண்ணங்களில் ..
எப்படி இருப்பினும் உன் நினைவும் அன்பும்
என் வாழ்வில் பல வாழ்க்கை உண்டாக செய்கிறது ....
வாழ்வின் அர்த்தங்களை புரியவைக்கிறது ...
இல்லையே உன்னை போல ஒரு உறவு .
மற்றவர்கள் புரிந்து கொள்ள
என்னை கோபபட வைக்க நொடியில்
முடிகிற உனக்கு என் கோபத்தை
தனிக்க கூட நொடியில் முடிகிறது உன்னால்
எப்படி என்று அறிய விரும்பவில்லை
விருப்பமும் இல்லை . நீ கோப படும் பொழுது
உன் கண்கள் மேலும் மேலும் ஒளி வீசுகிறதை
பார்க்க பார்க்க என் பார்வைக்கும் புதிய
பார்வை தெரிகிறது உன் கோபத்தில்
உன் கோபத்தில் மேலும் இன்புறுகிறேன் நான்.
எனக்கு மட்டுமே தெரியும்
என் எண்ணங்களின் வலிமை.
இருந்தும் எப்படி நான் பாதிக்கபடுகிறேன்?
உன் ஒரு பார்வையில்
என் சிந்தனை அனைத்தும் உன்
வசமாக்கி கொண்டாய் .
சங்கல்பமாக்கிக் கொள்வோம்
நம் உறுதியை .
அன்பு மூலம் அனைத்தும் சாத்தியப்படும்
சாத்தியமாகது என்று எதுவும் இல்லை
அன்பின் மூலம் .
போதும் என்று நீ சொல்வதால்
என் மனம் திருப்தி கொள்ளாது
உன் புன்னகை மீண்டும் மீண்டும் பார்க்க
ஆவலாய் உள்ளேன் போதும் என்று
சொல்லிவிடதே
உன் மகிழ்ச்சியில் உள்ளது என்
உயர்வுகள் ..
படைப்பாளிகள் இல்லை எனில்
இந்த பிரபஞ்சம் எதுவும் இல்லை
அவர்கள் மூலமே வாழ்க்கை
நிற்காமல் ஓடுகிறது
படைப்பு என்றுமே அதிசியம்
புரிந்தவர் புரியாதவர் என்று
பேதம் இல்லை அதனிடம்
படைப்பாளிகளை மதிப்போம்
படைப்பை அறிவோம் போற்றுவோம் .
இல்லை இல்லை இதுவா? நான் ?
என் சுயத்தை காணமல் தேடுகிறேன்
அவை எங்கே உள்ளது என்று ?
என் எண்ணத்தின் படியே நான் இல்லாத பொழுது
மற்றவர்களுக்கு எப்படி நான் தெரிவேன் ?
எனக்கு நான் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் என் எண்ணத்தின் படி
நான் வாழ்வது .என் வாழ்க்கை நான் வாழ வேண்டும்
இல்லை நான் என் எண்ணங்களில்
இருந்து விடு பட வேண்டும்
எனக்குள்ளே தேடுகிறேன் என்னை
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாய்
தெரிகிறேன் நான்.உண்மையில் "நான் "
யார் என்று தேடல் இருப்பதால் தான்
எனவோ நான் என் சுயத்தோடு இருக்கிறேனோ ?
வாழ்த்தவந்தது நட்பு என்பதால்
வாழ்க்கை அறிய முடிகிறது
என்னால்.
தோழமை உணர்வதால் தான்
தொன்றுதொட்டு வருகிற நம் நட்பை
அறிய முடிகிறது நம் அன்பில் .
அம்மா என்று உங்களை
முழுவதுமாக அறிந்து
கொள்ள முடிந்தது
உன் உயிரில் என்னை
வளர்த்தாய்
என் வளர்ப்பில் நீ
வளர்ந்தாய் புன்னகையில்
அம்மா நீங்கள் எப்பொழுதும்
புனிதமாக இருக்கிறிர்கள்
நான் தான் புரிந்து கொள்ளவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment